89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 60,000 கி.மீ பயணம்... 4 ஆண்டுகளாக இரு சக்கர வாகனத்தில் ஆன்மிக சுற்றுலா செல்லும் தாய், மகன்!

60,000 கி.மீ பயணம்... 4 ஆண்டுகளாக இரு சக்கர வாகனத்தில் ஆன்மிக சுற்றுலா செல்லும் தாய், மகன்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: 2018-ம் ஆண்டு முதல் இரு சக்கர வாகனத்தில் ஆன்மிகச் சுற்றுலா செல்லும் கர்நாடக மாநிலம் மைசூரு பகுதியைச் சேர்ந்த தாய், மகன் இருவரும் 60,450 கிலோ மீட்டர் பயணத்திற்கு பின் திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்தனர்.

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே போகாதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(45). இவரது தாய் ரத்தினம்மா (74). இவரது தந்தை தட்சிணாமூர்த்தி பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றியவர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அதிலிருந்து ரத்தினம்மா மன அழுத்தத்தில் இருந்ததால், அவரை ஆன்மிக தலங்களுக்கு அழைத்து செல்ல கிருஷ்ணகுமார் திட்டமிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/r32VLyD
via IFTTT