89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பெங்களூரு உணவகத்தில் தோசை, காபியை ருசித்த ஸ்டார்பக்ஸ் இணை நிறுவனர்: 3 ஸ்டார் கொடுத்து பாராட்டு

பெங்களூரு உணவகத்தில் தோசை, காபியை ருசித்த ஸ்டார்பக்ஸ் இணை நிறுவனர்: 3 ஸ்டார் கொடுத்து பாராட்டு

பெங்களூரு: உலகின் மிகப் பெரிய காபி செயின் வணிக நிறுவனமாக அறியப்படுகிறது ஸ்டார்பக்ஸ். இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் செவ் சீகல், பெங்களூரு நகரில் உள்ள வித்யார்தி பவனில் மசாலா தோசையும், ஃபில்டர் காபியும் ருசித்துள்ளார். அதோடு அதற்கு தனது மதிப்பீட்டையும் வழங்கி உள்ளார் அவர். இதனை அந்த உணவகம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது.

கடந்த 1943 வாக்கில் தொடங்கப்பட்ட வித்யார்த்தி பவன் உணவகம், வெற்றிகரமாக 79 ஆண்டுகளாக அந்த நகரில் இயங்கி வருகிறது. இந்த உணவகம் பெங்களூரு நகரில் பிரபல உணவகமாக அறியப்படுகிறது. பாரம்பரியமிக்க தென்னிந்திய சைவ முறை உணவுகளை வழங்கி வரும் உணவகம் இது. இங்குதான் செவ் சீகல் வருகை தந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bxDgzmh
via IFTTT