89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 100+ அரங்குகளுடன் விருதுநகரில் மாபெரும் புத்தகத் திருவிழா வியாழக்கிழமை தொடக்கம்

100+ அரங்குகளுடன் விருதுநகரில் மாபெரும் புத்தகத் திருவிழா வியாழக்கிழமை தொடக்கம்

விருதுநகர்: விருதுநகரில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் அரசு சார்பில் நடைபெறும் முதலாவது புத்தகத் திருவிழா நாளை (நவ.17) தொடங்குகிறது. அமைச்சர்கள் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைக்கின்றனர். நவ.27-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவையொட்டி தினமும் மாலையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மாவட்டத்தில் முதன்முறையாக மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப் பள்ளி வளாகத்திலுள்ள பொருட்காட்சி மைதானத்தில் இந்த விழாவை நடத்துகின்றன. தொடக்க விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைக்கின்றனர். எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/O4CPveU
via IFTTT