89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : இந்தியாவில் எங்கு சென்றாலும் பழமைக்கான சான்றுகள் உள்ளன: இந்தியத் தொல்லியல் துறை இயக்குநர் தகவல்

இந்தியாவில் எங்கு சென்றாலும் பழமைக்கான சான்றுகள் உள்ளன: இந்தியத் தொல்லியல் துறை இயக்குநர் தகவல்

விழுப்புரம்: இந்து சமய அறநிலையத் துறையின் விழுப்புரம் மண்டலம், விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம் இணைந்து நடத்திய கல்வெட்டு மற்றும் கோயிற் கலைப்பயிலரங்கம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது.

இப்பயிலரங்கத்திற்கு தலைமை வகித்து ஆட்சியர் மோகன் பேசியது:பல்லவர் காலத்து வரலாற்று சிறப்பு உடைய கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மண்டகப்பட்டு பகுதியில் அமைந்துள்ள கோயில்அழியா சிறப்புகளைக் கொண்டது.இக்கோயிலைதான் முதல் கற் கோயில் என்று குறிப்பிடுகிறோம். இன்றைய பொறியாளர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில், அக்காலத்திலேயே சிறப்பாக கட்டப்பட்டிருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9apbr73
via IFTTT