தமிழ் இலக்கியங்களில் ஆகச் சிறந்த நாவல்களின் பட்டியலில் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ புதினத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. சோழ மன்னர்களின் பெரு வாழ்வை பற்றி எழுதப்பட்ட இந்த நாவலைத் தழுவி இயக்குநர் மணிரத்னம் இயக்கி உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும், கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த காதபாத்திரமாக பார்க்கப்படுவது ஆதித்த கரிகாலனின் நண்பனாக வரும் வல்லவரையன் வந்தியத்தேவன்தான்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தில் நீண்ட நேரம் வரும் கதாபாத்திரமும் வல்லவரையன் வந்தியத்தேவன் கதாபாத்திரம்தான். அப்படிப்பட்ட ‘வல்லவரையன் வந்தியத்தேவன்’ சாயலில் சிலை ஒன்று சென்னையில் உள்ளது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அந்தச் சிலையை பலரும் கடந்து வந்திருந்தாலும், அதன் பின்புலம் அதிகம் தெரிந்திருக்காது. அந்த சிலை வைக்கப்பட்ட கதையை தெரிந்துகொள்ள நாம் பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TcMICxt
via IFTTT