89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சகதியில் சிக்கிய குட்டி யானை... ஓடிச்சென்று உதவிய சிறுமி... - இதயத்தை வென்ற ‘நன்றி’!

சகதியில் சிக்கிய குட்டி யானை... ஓடிச்சென்று உதவிய சிறுமி... - இதயத்தை வென்ற ‘நன்றி’!

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத விஷயங்களில் ஒன்று யானை. அதிலும் குட்டி யானை என்றால் கேட்வே வேண்டியதில்லை. கரிய நிறத்தில் சிறிய குன்று ஒன்று அசைந்தபடி வருவது போல வலம் வரும் யானைகள் இயற்கையின் பேரதிசயங்களில் ஒன்று. அதேபோல மற்றொரு அதிசயம் யானைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு. அது சொல்லில் அடங்காதது. காட்டைப் பகிர்ந்து வாழுந்த காலம் தொட்டு பலநூறு ஆண்டுகளாய் இந்த உறவு தொடர்ந்து வருகிறது. அதனாலேயே, இணையத்தில் பகிரப்படும் யானை குறித்த எந்தப் பதிவும், வீடியோவும் உடனடியாக வைரலாகி விடுகிறது. அப்படி சமீபத்தில் வைரலாகி இருக்கிறது இந்திய வனப்பணி அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள குட்டி யானை ஒன்றின் வீடியோ.

வீடியோவை பகிர்ந்துள்ள வனப்பணி அதிகாரி, "சகதியில் சிக்கிக் கொண்ட குட்டி யானைக்கு அந்தச் சிறுமி உதவினாள். ஆசீர்வாதத்துடன் அந்த அன்பை யானை ஏற்றுக்கொண்டது" என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/avyUIW4
via IFTTT