89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தேநீர் கடை வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் குழு மூலம் சேவை

தேநீர் கடை வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் குழு மூலம் சேவை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம், சாஸ்தமங்கலம் பகுதியில் உள்ளது சிந்தியா டீ ஸ்டால். இதன் உரிமையாளர் சந்திரனும், அவரது தேநீர் கடையும் இப்பகுதியில் பிரபலம். இந்தக் கடையின் வாடிக்கையாளர்களே மார்னிங் ப்ரண்ட்ஸ், ஒரு சாயா கூட்டாயுமா?, சந்திரன் கடையில் சாயா கூட்டாயுமா? என மூன்று வாட்ஸ் அப் குழுக்களையும் வைத்துள்ளனர்.

இதுகுறித்து இந்து தமிழ் திசையிடம் ஓய்வு பெற்ற போக்குவரத்து துணை கண்காணிப்பாளர் அப்துல் கூறுகையில், “சந்திரனின் தேநீர்கடை சிறு வயது நண்பர்களை அப்படியே இன்னும் நண்பர்களாகவே வைத்துள்ளது. நாங்கள் அடிக்கடி இங்கு சந்தித்துக் கொள்வோம். எங்களது அரட்டையில் சந்திரனும் சேர்ந்து கொள்வார். மார்னிங் ப்ரண்ட்ஸ் வாட்ஸ் அப் குழுவை இங்கே தேநீர் குடிக்க வரும் நண்பர்கள் சேர்ந்து உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் பல சேவைகளும் செய்து வருகிறோம். ஏழைகளுக்கும் நேசக்கரம் நீட்டி வருகிறோம்” என்றார்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zlsxjTP
via IFTTT