89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கேரளா | கடனை செலுத்த வங்கி நோட்டீஸ் வந்த சில மணி நேரத்தில் லாட்டரியில் ரூ.70 லட்சம் வசமான சம்பவம்

கேரளா | கடனை செலுத்த வங்கி நோட்டீஸ் வந்த சில மணி நேரத்தில் லாட்டரியில் ரூ.70 லட்சம் வசமான சம்பவம்

கேரள மாநிலத்தில் வங்கியில் பெற்ற கடனைத் திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வந்தவருக்கு கெடு தேதி நிர்ணயித்து வங்கியில் இருந்து டிமாண்ட் நோட்டீஸ் ஒன்று வந்துள்ளது. கையறு நிலையில் இருந்த அவருக்கு அடுத்த சில மணி நேரங்களில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.70 லட்சம் பரிசு கிடைத்தது தான் அந்த அதிர்ஷ்ட தகவல்.

அவர் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அக்டோபர் 12 அமைந்தது. அந்த நபரின் பெயர் பூக்குஞ்சு. கேரளாவில் மீன் விற்பனை செய்யும் தொழிலை அவர் மேற்கொண்டு வருகிறார். அவர் வாங்கியிருந்த அக்‌ஷயா லாட்டரியில் அவருக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MdXQyso
via IFTTT