89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருமலையில் தரிசனத்துக்கு 30 மணி நேரம் காத்திருப்பு

திருமலையில் தரிசனத்துக்கு 30 மணி நேரம் காத்திருப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 5-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் நிறைவுபெற்றது.

இந்நிலையில் புரட்டாசி மாதத்தில் சுவாமியை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் திருமலைக்கு திரண்டு வருகின்றனர். திருமலையில் நேற்று மாலை நிலவரப்படி சுமார் 5 கி.மீ. தொலைவு வரை பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் சர்வ தரிசனத்தில் (இலவச தரிசனம்) சுவாமியை தரிசிக்க சுமார் 30 மணி நேரம் ஆகும் என தேவஸ்தானம் அறிவித்தது. அதாவது நேற்று மாலை சர்வதரிசன வரிசையில் நின்றால், இன்று இரவு சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WH7VZCg
via IFTTT