89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : உடல் தானத்தின் பின்னால் 16 கொலைகள்!

உடல் தானத்தின் பின்னால் 16 கொலைகள்!

நவீனத் தமிழ் இலக்கியத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் தி.ஜானகிராமன். அவரது புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று ‘மோகமுள்’. அதற்கு திரை வடிவம் கொடுத்து, சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றவர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியும் எழுத்தாளரும், இயக்குநருமான ஞான ராஜசேகன். தனது தொடர்ச்சியான திரையுலகச் செயல்பாடுகள் மூலம், தமிழ் நிலத்தின் மாபெரும் ஆளுமைகளான பாரதி, பெரியார், ராமானுஜன் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுக்கு யதார்த்தமான திரைமொழியில் வடிவம் கொடுத்தவர். திரை இயக்கத்துக்காக மொத்தம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றுள்ள ஞான ராஜசேகரன் தற்போது ‘இந்திய ஆட்சிப்பணியும் சினிமாவும் மற்றும் நானும்’ என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதற்கிடையில் தன்னுடைய மகள் வசிக்கும் ஸ்காட்லாந்துக்கு சென்றுள்ளார். அங்கே தனது பயண அனுபவங்கள் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிந்து வருகிறார்.

ஒரு பதிவில் உடல்தானம் உருவான பின்னணியைக் குறித்து, எடின்பரா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு எலும்புக் கூட்டினை நேரில் கண்டு அதனுடைய உலுக்கும் உண்மைக் கதையை எழுதிருக்கிறார். அதை நம் வாசகர்களுக்கு அவரது அனுமதியுடன் இங்கு வழங்குகிறோம். இனி ஞான ராஜ சேகரன் விவரிக்கிறார்:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5awHFoJ
via IFTTT