கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் விமரிசையாக துர்கா பூஜை கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு நகரில் பந்தல் அமைத்து, துர்கா சிலைகள் வைத்து வழிபாடு நடந்து வருகிறது. இந்நிலையில், அப்படி அமைக்கப்பட்டுள்ள பந்தல்களில் பாலியல் தொழிலாளர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் ஒரு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இதில் இடம்பெற்றுள்ள சிலிகான் துர்கா சிலையும் கவனம் ஈர்த்து வருகிறது.
கொல்கத்தா நகரில் வெவ்வேறு வகையிலான கருப்பொருளில் துர்கா பூஜை கொண்டாட்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் இது. இந்தப் பந்தலில் வைக்கப்பட்டுள்ள துர்கா தேவி சிலை வழக்கத்திற்கு மாறாக உள்ளது. இந்த வகையிலான தேவி சிலை வடிவமைப்பது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/u7z8OWh
via IFTTT