மாமரம் ஒன்றில் இளைப்பாறும் சிறுத்தையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சிறுத்தை மரத்தில் ஏறுவதில் என்ன சிறப்பு எனக் கேட்பவர்கள் கொஞ்சம் பொறுங்கள். உங்களுக்கு ஒரு ஆச்சர்ய அதிர்ச்சி காத்திருக்கிறது. முதலில் பார்க்கும்போது உயரமான மாமரத்தில் ஒய்யாரமாக சிறுத்தை இளைப்பாறுவது போல தோன்றினாலும், வீடியோ ஓடத்தொடங்கிய கொஞ்ச நேரத்தில் காட்சிகள் ஜூம் அவுட்டாகும்போது சிறுத்தை மாமரத்தில் சிக்கிக் கொண்டிருப்பது தெரிய வருகிறது. அய்யையோ அந்த சிறுத்தைக்கு என்னச்சு எனப் பதறுபவர்களுக்கு... நீண்ட போரட்டத்திற்கு பின்னர் அந்தச் சிறுத்தை பத்திரமாக மீட்கப்பட்டு விட்டது.
இந்திய வனப் பணி (Indian Forest Service) அலுவலர் பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில், "காட்டுயிர்களை உயிர் பாதுகாக்கும் வன உயிர் மேலாண்மை என்பது தினசரி சாகசங்களைக் கொண்ட ஒரு துறை. மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் இந்தச் சிறுத்தை எப்படி அந்த உயரத்திற்குச் சென்றிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். நாங்கள் இப்போது அவரை மீட்டாக வேண்டும்" என்ற குறிப்புடன் மரத்தில் இளைப்பாறும் (சிக்கிக்கொண்ட) சிறுத்தை ஒன்றின் வீடியோவை பகிர்ந்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LXG8rzQ
via IFTTT