இன்று உலக மக்களின் வாழ்க்கை கேட்ஜெட் சூழ் உலகமாக அமைந்துள்ளது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், லேப்டாப், டேப்லெட் என இதன் பட்டியில் நீளமாக போய்க் கொண்டே இருக்கிறது. காற்றை போல 24/7 என இந்த கேட்ஜெட்கள் நம்மை ஆட்கொண்டுள்ளன. இத்தகைய சூழலில் அளவு கடந்து ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் பயன்பாடு தொடர்ந்தால் வெகு விரைவில் அதன் பயனர்கள் வயதான தோற்றத்தை பெறுவதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவது கண் மற்றும் உடல் ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நம்மில் பலரும் அறிந்திருப்போம். ஆனால் விரைவில் வயதான தோற்றம் அடைவார்கள் என்பது புது ரகமாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qmKOYZc
via IFTTT