ஒரு நகரத்தின் அழகு, அந்த நகரம் எந்த அளவுக்கு தூய்மையாக உள்ளது என்பதை வைத்துதான் அளவிடப்படும் என்றால் அது மிகையல்ல. சென்னையை சிங்கார சென்னையாக மாற்ற அரசு எத்தனை திட்டங்களை செயல்படுத்தினாலும், ஒரு நாள் தூய்மை பணிகள் நடைபெறவில்லை என்றால் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிடும்.
சமீபத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தில் தூய்மை பணியாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் எந்த நிலை ஏற்படும் என்பதை காட்சிப்படுத்தி இருப்பார்கள். இப்படி ஒரு சிறு கிராமம் முதல் பெரிய நகரம் வரையில் அங்கு வசிக்கும் மக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதில் தூய்மை பணியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆனால், பல நேரங்களில் அந்த தூய்மை பணியாளர்களும் நம்மை போன்ற மனிதர்கள்தான் என்பதை நம்மில் பலர் மறந்து விடுகிறோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G4OESoA
via IFTTT