108 வைணவ திவ்ய தேசங்களில், தஞ்சை மாவட்டம், ஆதனூர் பார்க்கவி தாயார் சமேத ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில், 11-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள இக்கோயிலில் பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
திருமாலை வேண்டி காமதேனு (ஆ) தவம் செய்த ஊர் என்பதால் (ஆ,தன்,ஊர்) ஆதனூர் என்ற பெயர் இவ்வூருக்கு கிட்டியது. கருவறை விமானத்தில் உள்ள 7 பூதகணங்களின் மத்தியில் வடக்கு நோக்கி அமையப் பெற்றுள்ள திருமால் சிலை, பல்லாண்டுகளாக வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vYDEPtz
via IFTTT