போடி: மூணாறு தேயிலை தோட்டங்களில் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அப்பகுதியில் அட்டைப்புழு ஒழிப்பு முறைகள் கையாளப்பட்டு தேயிலை கொழுந்து சேகரிக்கும் கூடைகளும் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது. பசுமையான பள்ளத்தாக்கு, பார்வையை மறைக்கும் மூடுபனி, படகுசவாரி, நீர்வீழ்ச்சி, மலையேற்றம் என்று சுற்றுலாப் பயணிகளை கவரும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. இதனால் உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aeDbB2S
via IFTTT