போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பானிபூரி விற்பனையாளர் ஒருவர் பெண் கல்வியை வலியுறுத்தும் விதமாக, தனது மகளின் 1-வது பிறந்தநாளை, 1 லட்சம் பானிபூரிகளை இலவசமாக கொடுத்து கொண்டாடியுள்ளார்.
போபால் மாவட்டம் கோலார் பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சல் குப்தா. பானிபூரி வியாபாரம் செய்துவரும் இவர், தனது மகள் அனோக்கியின் பிறந்தநாளை புதன்கிழமை கொண்டாடினார். மகளின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்ட நினைத்த ஆஞ்சல் குப்தா, தான் வசிக்கும் பகுதியில் உள்ள பாஞ்சரி மைதானத்தில், நீண்ட பந்தல் அமைத்து அதில், 21 பானிபூரி ஸ்டால் அமைத்து, அவைகளில் 1.01 லட்சம் பானிபூரிகளை இலவசமாக வழங்கியுள்ளார். பானிபூரிகள் வழங்கும் போது "பெண்களை பேணுங்கள், அவர்களுக்கு கல்வி கொடுங்கள்" என்ற செய்தியை வலியுறுத்தியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JBxEF0C
via IFTTT