89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தாய்க்கு நேர்ந்த சங்கடம்: மக்களுக்காக நடமாடும் கழிவறை அமைத்த பெங்களூரு காவல் அதிகாரி

தாய்க்கு நேர்ந்த சங்கடம்: மக்களுக்காக நடமாடும் கழிவறை அமைத்த பெங்களூரு காவல் அதிகாரி

பெங்களூரு: தனது தாய் எதிர்கொண்ட சங்கடத்தை தொடர்ந்து நடமாடும் கழிவறை வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் கர்நாடக காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சாந்தப்பா ஜடெம்மானவர். அவரது முயற்சி பல தரப்பு மக்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.

இந்தியாவின் சிலிகான் வேலி என அறியப்படுகிறது கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு. அந்த நகரில் கோரகுண்டேபாளையா என்ற பகுதி மிகவும் முக்கியமான சந்திப்பாக இயங்கி வருகிறது. இந்தப் பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள். இருந்தாலும் அங்கு முறையான கழிவறை வசதி இல்லை என தெரிகிறது. அது பெரும்பாலான மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இப்போது அதற்கு ஒரு தீர்வை கொண்டு வந்துள்ளார் சாந்தப்பா.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/26jlVCJ
via IFTTT