89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருப்பதியில் பக்தர்களின் கூட்ட நெரிசல் நேரங்களில் ஏழுமலையானுக்கு ஒரு மணி நேரமே ஓய்வு - தேவஸ்தான அதிகாரி தகவல்

திருப்பதியில் பக்தர்களின் கூட்ட நெரிசல் நேரங்களில் ஏழுமலையானுக்கு ஒரு மணி நேரமே ஓய்வு - தேவஸ்தான அதிகாரி தகவல்

திருப்பதி: திருப்பதியில் பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தி ஊடகத்தினருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் 2 நாள் பயிற்சி முகாமை நேற்று தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி தொடங்கி வைத்தார். இதில் தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் பேசியதாவது:

ஏழுமலையான் கோயிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும் உள்ளதால் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பை அதிகரிக்க திருப்பதி - திருமலை இடையே உள்ள மலைப்பாதையில் வேக கட்டுப்பாடு அமைக்கப்படும். வாகனங்கள் அதிவேகமாக வந்தால் உடனுக்குடன் அபராதம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாகன எண் பலகை ஸ்கேனர் அமைக்கப்படும். இதன் மூலம் விபத்து நடந்தாலோ அல்லது திருட்டு நடந்தாலோ உடனடியாக விவரம் அறிய இது உபயோகமாக இருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tBGgkPn
via IFTTT