89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கலைஞர் 100 | 36 வருடத்துக்குப் பின் கலைஞரின் நினைவாற்றல்!

கலைஞர் 100 | 36 வருடத்துக்குப் பின் கலைஞரின் நினைவாற்றல்!

ஓவியக் கலை, நடிப்புக் கலை, வாழும் கலை, எழுத்துக் கலை, பேச்சுக் கலை என வாழும் கலைகளில் தன் தடங்களை அழுந்தப் பதித்து வருபவர் பன்முகக் கலைஞர் சிவகுமார். அவர் கைதொட்ட கலைகள் அத்தனையிலும் தமிழ் வாழ்க்கையும் வாழிடங்களும் இடம்பெற்று வருவதன் மூலம் தமிழ்கூறும் நல்லுலகின் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர். அப்படிப்பட்டவர் தன்னை ஆர்கஷித்த ஆளுமைகளைப் பற்றியும் பதியத் தவறவில்லை. கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, அவருடனான தனது வாழ்க்கை அனுபவங்களை ‘கலைஞர் -100’ தொடரின் வழியாகப் பகிர்ந்து கொள்கிறார். இனி சிவகுமார் உங்களோடு:

“அது 1988 வருடம், நவம்பர் 14-ம் தேதி. சென்னை சாலிகிராமத்தில் இருந்த அருணாசலம் ஸ்டுடியோவுல ‘மனித ஜாதி’ படப்பிடிப்புல இருந்தேன். கலைமணிதான் படத்தை தயாரிச்சு, டைரக்ட் பண்ணிகிட்டிருந்தாரு. நாலு மணி வாக்குல ஒரு போன் வந்தது. கனிமொழி பேசினாங்க. ‘சார், அப்பா உங்க வீட்டுக்கு இன்னிக்கு வர்றேன்னிருக்காங்க’ன்னாங்க. எனக்கு ‘ஷாக்!’. ‘ஏம்மா நீயும், அம்மாவும்தானே பெயிண்டிங்ஸ் பார்க்க வர்றேன்னீங்க? உண்மையிலேயே அப்பா வர்றாரா?’ன்னு கேட்டேன். ‘ஆமா’ன்னாங்க. எனக்கு இன்ப அதிர்ச்சியாயிருந்தது!



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5CK6zAi
via IFTTT