அனைத்துத் துறையிலும் தொழில் சார்ந்த உத்திகள் உண்டு. ஆனால், உணவு சார்ந்த விஷயத்தில் அறமற்ற செயல்பாடு நடைபெறுகிறதெனில் பாதிக்கப்படப் போவது நாம்தான்.
ஒரு பழ மண்டியிலிருந்து பள்ளிக் குழந்தைகளுக்கோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கோ செயற்கை வேதிப்பொருட்களின் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை வாங்கிச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம், அதனால் பாதிப்பு ஏற்படுமானால் யார் பொறுப்பு? அது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் வேதித் தாக்குதலுக்கு ஆட்பட்ட பழங்களை வாங்கிச் செல்லும் நாமும் ஏதோ ஒரு வகையில் குற்றவாளிகள்தானே!
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9kwMTX5
via IFTTT