89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : விஸ்மயா வழக்கில் நம் சமூகம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? - ஒரு தெளிவுப் பார்வை

விஸ்மயா வழக்கில் நம் சமூகம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? - ஒரு தெளிவுப் பார்வை

கடந்த ஆண்டு கரோனாக் காலத்தில் கேரளத்தில் கொல்லம் அருகே விஸ்மயா என்னும் 22 வயதுப் பெண் வரதட்சிணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார். கேரளத்தை மட்டுமல்லாமல் தமிழகத்தையும் உலக்கியது இந்தச் சம்பவம். இது நடந்து 11 மாதம் இரு நாள்கள் ஆன நிலையில் விஸ்மயாவின் கணவர் இந்த வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்குப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை அறிவித்துள்ளது கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம்.

சமூகத்தில் பல நிலைகளில் இந்தத் தீர்ப்பு வரவேற்கப்பட்டுள்ளது. வரதட்சிணை கொடுமைக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு எனப் பலரும் கருத்துத் தெரிவித்துவருகிறார்கள். ஆனால், மிகப் பழமையான இந்த வழக்கத்தை இந்த ஒரே ஒரு தண்டணை மூலம் அடியோடு துடைத்தழிக்க முடியுமா என்பது விடை காணாக் கேள்விதான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wrAMVyR
via IFTTT