காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடந்ததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 13-ம்தேதி தொடங்கியது. இரண்டாண்டுகள் கழித்து இந்த பிரம்மோற்சவம் நடைபெறுவதால் முதல் நாள் விழாவில் இருந்தே பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி நடைபெற்ற கருட சேவை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dpKlsNg
via IFTTT