ஆரோக்கியத்தின் அடித்தளமாக இருந்த உணவு இன்று, சுவையை மட்டும் பிரதானமாகக்கொண்ட ஒன்றாகச் சுருங்கிவிட்டது; அது ஆரோக்கியத்துக்கும் எமனாக மாறிவிட்டது. நவீன உணவு முறையின் காரணமாக அபாயகரமான அளவில் அதிகரித்துவரும் நோய்களும், உயிரிழப்புகளும் உணர்த்தும் சேதி இது. இந்தச் சூழலில், நவீன மோகத்திலிருந்து நம் உணவு முறையை மீட்டெடுக்கும் முயற்சிகளை இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
அத்தகைய முன்னெடுப்புகளில் ஒன்றே, செம்புலமும், பிரபல சமையல் சுற்றுலா கலைஞர் ராகேஷ் ரகுநாதனும் இணைந்து சென்னையில் நடத்தும் பாரம்பரிய அரிசி உணவுத் திருவிழா. பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கும், பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாப்பதற்கும் செம்புலம் (இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம்) கடந்த 25 ஆண்டுகளாகத் தொய்வின்றி தொடர்ந்து பல முன்னெடுப்புகளை எடுத்துவருகிறது. அதே போன்று, நம்மூர் பாரம்பரிய சமையல் முறைகளில் ராகேஷ் ரகுநாதன் கொண்டிருக்கும் ஆர்வம் அளப்பரியது. இவர்கள் இணைந்து நடத்தும் இந்தத் திருவிழா மே 13 முதல் மே 24 வரை நடக்க இருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zAOCXZc
via IFTTT