89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வெயில் காலத்தை எதிர்கொள்வது எப்படி? - விழிப்பு முதல் உறக்கம் வரை பின்பற்றத்தக்க நலக் குறிப்புகள்

வெயில் காலத்தை எதிர்கொள்வது எப்படி? - விழிப்பு முதல் உறக்கம் வரை பின்பற்றத்தக்க நலக் குறிப்புகள்

வெயில் காலம் வந்துவிட்டால் போதும். அப்பாடா வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். வீட்டிற்குள்ளேயே இருந்து விடலாமா என்று தோணும். அந்த அளவுக்கு சும்மா வெயில் சுட்டெரிக்கும். கடந்த சில வருடங்களாகவே கோடை காலத்தில், கடும் வெயில் நிலவுவதைப் பார்த்து வருகிறோம். அந்தவகையில் இந்த வேனிற் காலத்தை பயமில்லாமல் மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள விழிப்பு முதல் உறக்கம் வரை பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பார்க்கலாம்.

குளியல்: வேனிற் காலத்தில் சூரிய உதயத்துக்கு முன் கண் விழிப்பது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். இந்தக் காலத்தில் காலை, மாலை என இரண்டு வேளைகளும் குளிப்பது சிறந்தது. உடலில் வியர்வை அதிகம் கசிவதால் உண்டாகும் அசுத்தத்தைப் போக்கவும் உடல் வெப்பத்தைக் குறைக்கவும் நீராடுவது பயன்தரும். வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய் குளியல் செய்வதால், வெயில் கால நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fZW8lkE
via IFTTT