மாசி ஏகாதசியில் பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டுவோம். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வோம். மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். மங்காத செல்வம் தந்தருள்வார் வேங்கடவன். அருகில் உள்ள விஷ்ணு ஆலயம் செல்வோம். துளசி தீர்த்தம் பருகுவோம். அலங்காரப் பிரியனான அனந்தனை, மகாவிஷ்ணுவை, வேங்கடவனைப் போற்றித் துதிப்போம். சகல ஐஸ்வரியங்களும் தந்தருளுவார் பெருமாள்.
மாசி மாதம் வழிபாட்டுக்கு உரிய மாதம். மாசி மாதம் என்பது பூஜைகளுக்கும் மந்திர ஜபங்களுக்கும் உகந்த மாதம். மாசி மாதம் முழுக்கவே விளக்கேற்றி தினமும் பூஜைகள் மேற்கொள்ளலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38pNDaq
via IFTTT