காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற சுந்தராம்பிகை சமேத கைலாசநாதர் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டு விழா நடத்தப்படவில்லை. நிகழாண்டு விழா மார்ச் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. பிரம்மோற்சவ விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் இன்று (மார்ச் 8) காலை நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rrJaf2
via IFTTT