மாசி மாதத்தில் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்யவேண்டும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்றோ குலதெய்வத்தை வீட்டில் இருந்தபடியோ குடும்பத்தினர் அனைவரும் இணைந்து வழிபட வேண்டும். நம் குலம் தழைக்கும். வம்சம் சிறக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். குலதெய்வ வழிபாட்டைச் செய்வதால், மனம் குளிர்ந்து நம்மையும் நம் குடும்பத்தையும் நம் வம்சத்தையும் குலதெய்வம் காத்தருளுவார் என்பது ஐதீகம். முக்கியமாக, குலதெய்வ வழிபாட்டைச் செய்யும் போதெல்லாம் நம் முன்னோர்கள் அதாவது பித்ருக்கள், நம்மை ஆசீர்வதித்து அருளுவார்கள். தெய்வமாகவே இருந்து நம்மை எப்போதும் காப்பார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
வழிபாடு என்பது மிக முக்கியமானது. நம் கர்ம வினைகளை அகற்றவும் நாம் எப்போதோ, எந்த ஜென்மத்திலோ செய்த பாவ புண்ணியங்களுக்கு உரிய பலன்களைக் கொடுப்பதும் நம்முடைய வழிபாடுகளால் கெடுபலன்கள் குறைவாகவும் நற்பலன்கள் அதிகமாகவும் நிகழ்கின்றன என்கிறது சாஸ்திரம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38jJKE9
via IFTTT