89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மயிலையில் அறுபத்து மூவர் விழா!  அன்னதானம்; நீர் மோர்; இனிப்புகள் தானம்! 

மயிலையில் அறுபத்து மூவர் விழா!  அன்னதானம்; நீர் மோர்; இனிப்புகள் தானம்! 

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், ஏராளமான விழாக்களும் விசேஷங்களும் உண்டு என்றாலும் பங்குனி மாதத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் திருவிழா அமர்க்களப்படும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், வரும் வெள்ளிக்கிழமை 26ம் தேதி மயிலாப்பூரில் அறுபத்து மூவர் விழா நடைபெறுகிறது. இந்தவிழாவின் போது அன்னதானம் ஆங்காங்கே நடைபெறும். நீர்மோர், பிஸ்கட், இனிப்புகள் என பக்தர்களுக்கு வழங்குவார்கள்.

சென்னையின் மிக முக்கியமான பகுதியாகத் திகழ்வது மயிலாப்பூர். இங்கே ஸ்ரீகற்பகாம்பாள் உடனுறை ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகிற அன்பர்கள், நிச்சயமாக கற்பகாம்பாளையும் கபாலீஸ்வரரையும் தரிசித்துச் செல்வார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3d6if2x
via IFTTT