குரு பிரம்மா தனிச்சந்நிதியில் குடிகொண்டிருக்கும் திருச்சி திருப்பட்டூர் பிரம்மா கோயிலில், பங்குனி பிரம்மோத்ஸவப் பெருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தருணத்தில், பிரம்மாவுக்கு உகந்த வியாழக்கிழமையில், பிரம்மோத்ஸவத்தின் போது பிரம்மாவை தரிசித்தால், மகா புண்ணியம் என்றும் இதுவரையிலான தோஷங்களும் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.
பிரம்மாவுக்கு என ஆலயங்கள் வெகு குறைவு. அந்த குறைவான ஆலயங்களில் நம் வாழ்வையே நிறைவுபடுத்துகிற, செம்மைப்படுத்துகிற கோயிலாகத் திகழ்கிறது திருப்பட்டூர் திருத்தலம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31qavTD
via IFTTT