89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருப்பட்டூர் பிரம்மா கோயிலில் பிரம்மோத்ஸவ விழா; 24ம் தேதி திருக்கல்யாண வைபவம்! 

திருப்பட்டூர் பிரம்மா கோயிலில் பிரம்மோத்ஸவ விழா; 24ம் தேதி திருக்கல்யாண வைபவம்! 

பிரம்மா குடிகொண்டிருக்கும் திருப்பட்டூரில் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் பிரம்மோத்ஸவப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு, கடந்த 19ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோத்ஸவ பெருந்திருவிழா. பனிரெண்டு நாள் திருவிழாவாக, தினமும் காலையும் மாலையும் உத்ஸவம், சிறப்பு பூஜைகள் என விமரிசையாக நடைபெறும் இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

மகாவிஷ்ணு, பிரம்மா, பதஞ்சலி முனிவர், வியாக்ர பாத முனிவர் முதலானோரோல் பூஜிக்கப்பட்டு வழிபடப்பட்டு, வரங்களைப் பெற்ற திருத்தலம் எனும் பேரும் பெருமையும் கொண்டது திருப்பட்டூர் திருத்தலம். திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் சாலையில் சுமார் 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிறுகனூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், சுமார் 5 கி.மீ. பயணித்தால், திருப்பட்டூர் திருத்தலத்தை அடையலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tIZFnz
via IFTTT