திருநெல்வேலியில் அமைந்திருக்கும் ஸ்ரீகாந்திமதி அன்னை சமேத ஸ்ரீநெல்லையப்பர் கோயிலில், பங்குனி உத்திர வைபவத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறும். ஸ்ரீகாந்திமதி அம்பாளையும் ஸ்ரீநெல்லையப்பரையும் தரிசித்து, வில்வார்ச்சனையும் குங்கும அர்ச்சனையும் செய்து ஏராளமான பக்தர்கள் வழிபடுவார்கள். கருணைப் பார்வையால் பக்தர்களுக்கு அருள்மழை பொழியும் காந்திமதி அன்னையையும் நம் அப்பன் நெல்லையப்பரையும் மனதார வேண்டினால், மாங்கல்ய வரம் நிச்சயம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!
பங்குனி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். பூஜைகளுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில்தான் பல ஆலயங்களிலும் பிரம்மோத்ஸவ விழாக்களும் திருமண வைபவங்களும் சிறப்புற நடைபெறும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31dwwop
via IFTTT