89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பங்குனி உத்திரம் ; ஐயன் ஐயப்பனுக்கு அவதார பூஜை! 

பங்குனி உத்திரம் ; ஐயன் ஐயப்பனுக்கு அவதார பூஜை! 

ஸ்ரீஐயப்ப சுவாமி, மணிகண்ட சுவாமியாக மண்ணில் அவதரித்த நன்னாளான பங்குனி உத்திர திருநாளில், அருகில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலுக்குச் சென்று ஐயன் ஐயப்பனை கண்ணாரத் தரிசிப்போம். சாஸ்தா என்றும் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி என்றும் போற்றப்படும் ஸ்ரீமணிகண்டனுக்கு பங்குனி உத்திரநாளில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொள்வோம். பங்குனி உத்திர நாள்தான், ஸ்ரீஐயப்ப ஸ்வாமி அவதரித்த தினம் என்பதால், இந்த நாளில் காலை முதல் இரவு வரை, ஸ்ரீஐயப்ப ஸ்வாமி குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும்.

சபரிமலை நாதன், சபரிகிரிவாசன், ஐயப்ப சுவாமி என்றெல்லாம் அழைக்கப்படும் ஐயப்ப சுவாமிக்கு சாஸ்தா என்றும் பெயர் உண்டு. மணிகண்ட சுவாமியாக அவதரித்தார் என்கிறது புராணம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lKFF1b
via IFTTT