நவக்கிரகத்தில் உள்ள செவ்வாய் பகவானையும் சந்நிதியில் இருந்தபடி காட்சி தரும் முருகக் கடவுளையும் தொடர்ந்து வழிபட்டு வரலாம். வீட்டில் பிரார்த்தனை செய்து, எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்தும் அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவதும் முருகக் கடவுளுக்கு செவ்வரளி முதலான செந்நிற மலர்களைச் சூட்டி வணங்குவதும் கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுக்கும். சொந்த வீடு கொடுத்து அருளுவார் கந்தகுமாரன்!
முருகப்பெருமானை தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்தால், சொந்த வீடு மனை வாங்கும் யோகம் அமைத்துக் கொடுப்பார் வெற்றிவேலன்.
எவ்வளவு சம்பாதித்தாலும் எல்லோருக்கும் இருக்கிற மிக முக்கியமான ஆசை, நியாயமான விருப்பம் சொந்தவீடு என்பதுதான். சொந்த வீடு என்பதுதான் பெரும்பான்மையோரின் லட்சியமாக இருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rYE75G
via IFTTT