காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சிறப்பான வகையில் நடத்தப்படும் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீரங்கத்துக்கு இணையாகக் கருதப்படும், காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் 15 நாட்கள் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவ விழா தொடக்கமாக, கொடியேற்றம் இன்று (பிப்.16) காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத நித்யகல்யாணப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிக் கம்பத்தின் அருகே எழுந்தருளினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2NzDosv
via IFTTT