திருவாரூரையும் திருவாரூரைச் சுற்றியுள்ள விடங்கர் கோயில்களையும் ஒரேநாளில் சென்று தரிசிக்கலாம். அப்படி தரிசிப்பது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. சப்த விடங்க தலங்கள் என்று போற்றப்படும் இந்த ஏழு தலங்களையும், ஒரேநாளில் தரிசிப்பது மகா புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சிவனாரின் கோயில்களில்தான் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரிவுகளாக, பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. காவிரியின் வடகரைக் கோயில்கள், தென் கரைக் கோயில்கள், பாடல் பெற்ற தலங்கள், வைப்புத் தலங்கள் என்றெல்லாம் இருக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2NwhS7Y
via IFTTT