காசி எனும் புண்ணிய நகரத்துக்கு இணையான திருத்தலம் தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில். காசியில் இறந்தால் முக்தி என்பார்கள். ஆனால் தென்காசியில், பிறந்தாலும் முக்தி. இருந்தாலும் முக்தி. இறந்தாலும் முக்தி என்கிறது ஸ்தலபுராணம். ஒருமுறையேனும் தென்காசி க்ஷேத்திரத்துக்கு வந்து காசி விஸ்வநாதரைத் தரிசித்தாலே முக்தி நிச்சயம் என்று போற்றுகிறார்கள் சிவாச்சார்யப் பெருமக்கள்
சச்சிதானந்தபுரம், முத்துதாண்டவ நல்லூர், ஆனந்தக்கூத்தனூர், சைவ மூதூர், தென்புலியூர் என்றெல்லாம் பல பெயர்களைக் கொண்டது தென்காசி திருத்தலம். செண்பகப்பொழில், சித்திர மூலத்தானம், மயிலைக்குடி என இன்னும் ஏராளமான பெயர்கள் தென்காசி க்ஷேத்திரத்துக்கு உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3q0iW2w
via IFTTT