தை மாத சனிக்கிழமையில், சனீஸ்வரரின் காயத்ரியைச் சொல்லுங்கள். தை கடைசி சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வணங்குங்கள். காகத்துக்கு எள் சாதமிடுங்கள். தோஷங்கள் அனைத்தும் விலகும். சந்தோஷங்கள் பெருகும் என்பது ஐதீகம்.
நவக்கிரகங்களில் மிக முக்கியமான கிரகம் சனி பகவான். நவக்கிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் எனும் பெருமை கொண்டவர் சனி பகவான். ராகு - கேது பெயர்ச்சிக்கோ குருப்பெயர்ச்சிக்கோ பெரிதும் பயப்படமாட்டோம். ஆனால் சனிப்பெயர்ச்சி என்றால் என்னாகுமோ என்ன செய்வாரோ என்று கலங்கி விடுகிறோம். காரணம்... நமக்கு சோதனைகளையும் தருபவர் அவர்தான். அதேசமயம் நம்மை சாதனை மனிதராக்குபவதும் அவர்தான்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39RDfJJ
via IFTTT