தை வெள்ளிக்கிழமையில் மறக்காமல் லக்ஷ்மி அஷ்டோத்திரம் கேளுங்கள். சொல்லுங்கள். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். முடிந்தால், சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம் முதலான மங்கலப் பொருட்களை வழங்குங்கள். சுக்கிர யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள். சுக்கிர பலம் பெற்று சுபிட்சத்துடன் திகழலாம்.
வெள்ளிக்கிழமை என்பதை சுக்கிர வாரம் என்பார்கள். சுக்கிர பகவானின் பலம் பொருந்திய நன்னாள். வெள்ளிக்கிழமை என்பது லக்ஷ்மிக்கு உரிய நாள். அம்பாளுக்கு உரிய நாள். சக்தி தெய்வங்களுக்கு உகந்த அற்புதமான நாள். இந்த நாளில், அம்பாள் வழிபாடு செய்வது விசேஷம் என்று போற்றுகிறது சாஸ்திரம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3twdgzc
via IFTTT