பூவனூர் திருத்தலத்துக்கு வந்து சதுரங்க வல்லபநாதரையும் ஸ்ரீராஜராஜேஸ்வரியையும் ஸ்ரீசாமுண்டீஸ்வரரையும் மனதார வழிபட்டு பிரார்த்தனை செய்துகொண்டால், குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். வாழ்வில் இதுவரை இருந்த தடைகளெல்லாம் தகர்த்து அருளுவார்கள் என்கிறார்கள் பக்தர்கள்.
திருவாரூரில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது பூவனூர் திருத்தலம். நீடாமங்கலத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஊர். அற்புதமான இந்த ஊரில்தான், தமிழகத்தில் வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீசாமுண்டீஸ்வரி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pTMMW8
via IFTTT