பெருமாளை ஆலயத்தின் சந்நிதியில் சென்று தரிசிக்க உத்தராயன வாசல், தட்சிணாயன வாசல் என்றிருக்கும் ஆலயங்கள் வெகு குறைவு. அப்படி உத்தராயன வாசல், தட்சிணாயன வாசல் என இரண்டு வாசல் சந்நிதிகொண்டிருக்கும் ஆலயங்களில் திருவெள்ளறை திருத்தலமும் ஒன்று.
திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவெள்ளறை திருத்தலம். இந்தத் தலத்தில் பெருமாளின் திருநாமம் ஸ்ரீபுண்டரீகாக்ஷ பெருமாள். அற்புதமான திருக்கோலத்தில் அழகும் கருணையும் ததும்பக் காட்சி தருகிறார் பெருமாள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cWgK8i
via IFTTT