நரசிம்ம வழிபாடு என்பது வலிமை மிக்கது. வலிமையைத் தந்தருளக் கூடியது. திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில் உள்ள நரசிம்மப் பெருமாள் மிகுந்த வரப்பிரசாதி. நரசிம்ம பெருமாளை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். திருவல்லிக்கேணியில் தை மாத பிரம்மோத்ஸவம் விமரிசையாக நடந்துகொண்டிருக்கிற வேளையில் நரசிம்மப் பெருமாளை கண்குளிர தரிசிப்போம்; மனதாரப் பிரார்த்திப்போம்.
துர்குணம் கொண்டவர்களை அழிக்காமல் விடமாட்டார் மகாவிஷ்ணு என்பதை நாம் அறிவோம். அதேபோல், நற்குணம் கொண்டவர்களை எப்போதும் காத்தருள்வார் மகாவிஷ்ணு. இந்த இரண்டுக்கும் உதாரணங்கள் பல உண்டு என்றாலும் மிக முக்கியமான அவதாரமாகப் போற்றப்படுகிறது நரசிம்ம அவதாரம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2MtEgik
via IFTTT