89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருக்கோஷ்டியூரில் நான்கு பெருமாளின் திவ்விய தரிசனம்!  விளக்கு எடுத்துச் சென்றால் விடியல் நிச்சயம்! 

திருக்கோஷ்டியூரில் நான்கு பெருமாளின் திவ்விய தரிசனம்!  விளக்கு எடுத்துச் சென்றால் விடியல் நிச்சயம்! 

திருக்கோஷ்டியூர் எனும் புண்ணிய க்ஷேத்திரத்துக்கு வந்து, நான்கு பெருமாளின் திருக்கோலங்களை அற்புதமாகத் தரிசிக்கலாம். இங்கே விளக்கு எடுத்து வந்து வீட்டில் பூஜித்து வந்தால், நம் வாழ்க்கையில் விடியல் நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மதுரையில் இருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கோஷ்டியூர். சிவகங்கையில் இருந்து 24 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த ஊர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கோஷ்டியூர் திவ்விய க்ஷேத்திரம்.
கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அழகுக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீசெளம்ய நாராயண பெருமாள். மது கைடபர்களும் ஸ்ரீபிரம்மாவும் ஸ்ரீசரஸ்வதிதேவியும் என காட்சி தருகிறார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2NRyGq8
via IFTTT