மாசி மக நன்னாளில், நம்மால் முடிந்த அன்னதானம் அல்லது பொருள்தானம் செய்து பிரார்த்தித்துக் கொண்டால், வாழ்வில் சத்விஷயங்கள் நம்மை வந்தடையும். மனதில் இருந்த குழப்பமும் பயமும் நீங்கும். மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாசி மாதத்தில், நாம் செய்யும் சடங்குகளும் வழிபாடுகளும் மிக மிக வலிமையைக் கொடுக்கும். வாழ்வில் பல உன்னதங்களை நிகழ்த்தும். குடும்பத்தை மேன்மைப்படுத்தும். மாசி மாதம் என்பதே மகத்துவம் மிக்க மாதம். கலைகளையும் கல்வியையும் கற்றுத் தெளிவதற்கு ஏற்ற மாதம். மாசி மாதத்தில் நாம் செய்யும் சிவ வழிபாடு, பெருமாள் ஆராதனை, அம்மன் வழிபாடு, முக்கியமாக மகாலக்ஷ்மி வழிபாடு முதலானவை எண்ணற்ற பலன்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dHpMql
via IFTTT