முக்தி தரும் தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உறுப்புகளைக் கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது. நகரேஷு காஞ்சி என்று சொல்லப்படும் காஞ்சி மாநகரம், ஸ்ரீநாராயணரின் இடுப்புப் பகுதி என்று அழைக்கப்படுகிறது. அவந்தி திருத்தலம் காலடி என்றும் துவாரகை திருத்தலம் தொப்புள் என்றும் ஹரித்வார் மார்புப் பகுதி என்றும் மதுரா கழுத்துப்பகுதி என்றும் காசி நாசிப்பகுதி என்றும் அயோத்தி நகரம் சிரசுப்பகுதி என்றும் போற்றப்படுகிறது.
காஞ்சி மாநகரில் பிரமாண்டமானதொரு கோயிலில் சேவை சாதிக்கிறார் ஸ்ரீவரதராஜ பெருமாள். அகத்தியர் பெருமானுக்கு ஸ்ரீஹயக்ரீவர், ‘ஸ்ரீவித்யை’யை உபதேசித்த திருத்தலம் இதுதான். சக்தி பீடங்களில் ஸ்ரீசக்ர பீடம் என்று போற்றப்படுகிற, புகழப்படுகிற, வணங்கப்படுகிற திருத்தலம் காஞ்சி மாநகரம் என்கிறது காஞ்சி ஸ்தல புராணம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3q2EDyB
via IFTTT