89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வீடு மனை யோகம் தரும் குமார ஸ்தவம்! 

வீடு மனை யோகம் தரும் குமார ஸ்தவம்! 

வினைகள் தீர்த்தருள்வான் வேலவன் என்ற வாசகம் உண்டு. ‘யாமிருக்க பயமேன்’ என முருகப்பெருமானே அருளியுள்ளார். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், முருகப்பெருமானின் தீவிர பக்தர். மனமுருக அவர் பாடிய குமாரஸ்தவம் கேட்டு முருகப்பெருமானே திருக்காட்சி தந்தருளினார் என்கிறார்கள் முருக பக்தர்கள்.

பாம்பன் சுவாமிகள் அருளிய குமார ஸ்தவம் பாராயணம் செய்து மனதார வேண்டிக்கொண்டால் போதும். தீராத நோயைத் தீர்த்துவைப்பார். வழக்கு முதலானவற்றில் வெற்றியைத் தந்தருள்வார். தொழிலில் வியாபாரத்தில் மேன்மையை ஏற்படுத்தி அருளுவார். வீடு மனை வாங்கும் யோகத்தைக் கொடுப்பார் வெற்றிவேலன்.
குமார ஸ்தவத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், சஷ்டி மற்றும் கிருத்திகை நட்சத்திர நாளிலும் சொல்லி வழிபடுங்கள். சகல யோகங்களும் தந்தருள்வார் சக்தி வடிவேலவன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35bd4Lo
via IFTTT