89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil :  பகை விரட்டுவாள்; வெற்றியைத் தருவாள் வாராஹி! 

 பகை விரட்டுவாள்; வெற்றியைத் தருவாள் வாராஹி! 

வருகிற 3ம் தேதி பஞ்சமி. பஞ்சமியில் வாராஹியை ஆத்மார்த்தமாக வழிபடுங்கள். மனதைப் பக்க்குவப்படுத்தித் தருவாள். பகை அனைத்தையும் விரட்டியடிப்பாள். கடன் முதலான பிரச்சினைகளில் இருந்து நம்மை மீட்டெடுப்பாள்.

வாராஹி தேவி, கலக்கத்தையும் நடுக்கத்தையும் துடைப்பவள். சப்தமாதர்களில் தலையாயவள். சேனைப்படைகளின் தலைவியாகத் திகழ்பவள்.
வாழ்வில் நாம் படுகிற துயரத்தையெல்லாம் அவளிடம் சொல்லி முறையிட்டால் போதும்... என்ன பேசுவது என நடுக்கம் வந்தால், குழப்பம் வந்தால், தயக்கம் ஏற்பட்டால் மனதில் வாராஹியை மனதார நினைத்துக் கொண்டால் போதும், நடுக்கம் காணாமல் போகும்; குழப்பம் தெளிவாகும்; தயக்கம் உடைபடும். வார்த்தைகள் மளமளவென வரும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hD4fyT
via IFTTT