89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பொங்கலுக்கு பகலில் திறக்கப்படும்; திங்கட்கிழமை இரவில் திறக்கப்படும்; பரக்கலகோட்டை பொது ஆவுடையார் அதிசயம்!  

பொங்கலுக்கு பகலில் திறக்கப்படும்; திங்கட்கிழமை இரவில் திறக்கப்படும்; பரக்கலகோட்டை பொது ஆவுடையார் அதிசயம்!  

பொங்கல் திருநாளில் பகலிலும் ஒவ்வொரு திங்கட்கிழமையில் இரவிலும் திறக்கப்படும் பரக்கலகோட்டை பொது ஆவுடையாரை தரிசிப்போம். சகல ஐஸ்வரியங்களையும் பெறுவோம்!

காலையில் கோயிலின் நடை திறந்து உச்சிகால பூஜையை முடித்ததும் நடை சார்த்துவார்கள். பிறகு சாயரட்சை பூஜையானது மாலையில் 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 அல்லது 9 மணிக்கு அர்த்தசாம பூஜையுடன் நடை சார்த்தப்படும். சைவ, வைணவ பேதமில்லாமல் எல்லாக் கோயில்களிலும் இப்படித்தான். அம்மன் கோயில்களிலும் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் இப்படியான நடைமுறைதான். ஆனால், திங்கட்கிழமை மட்டும் இரவில் மட்டும் திறக்கப்படுகிற கோயில் ஒன்று தமிழகத்தில் உள்ளது. இந்தக் கோயிலின் இன்னொரு விசேஷம்... வருடத்தில் ஒரேயொரு நாள் மட்டும்... பொங்கல் திருநாளில் மட்டும் பகலில் திறக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ளது பரக்கலக்கோட்டை. இந்தத்தலத்தின் இறைவன் சிவபெருமான். இறைவனின் திருநாமம் - பொது ஆவுடையார். பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோயிலானது, வாரந்தோறும் திங்கட்கிழமை இரவில் திறக்கப்படுகிறது. பொங்கல் திருநாளான ஜனவரி 14ம் தேதி பகலிலும் திறக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3i6je4M
via IFTTT