காரைக்கால் சந்திர புஷ்கரணியில் (காரைக்கால் அம்மையார் குளம்) ரங்கநாயகி தாயார் தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று (ஜன.15) நடைபெற்றது.
கனுப் பொங்கலையொட்டி காரைக்கால் நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலில் கனுப்பொடி (கலவை சாதம்) வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ரங்கநாயகி தாயார் கோயில் வடக்கு வாசல் பகுதியில் சந்திர புஷ்கரணி அருகில் எழுந்தருளச் செய்யப்பட்டார். தொடர்ந்து பட்டாச்சாரியார்களால் சந்திர புஷ்கரணிக்கு சடாரி கொண்டு செல்லப்பட்டு, அங்கு கனுப் பொடி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ikgPn1
via IFTTT