தை வெள்ளிக்கிழமை சுக்கிர வாரத்தில் மகாலக்ஷ்மியை மனதார வழிபடுவோம். மங்கல காரியங்களை நடத்திக் கொடுப்பாள். இல்லத்தில் சுபிட்சத்தை உண்டாக்கித் தருவாள். அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று வேண்டுவதும் வழிபடுவதும் புற்றுக்குப் பால் வார்த்து வேண்டிக்கொள்வதும் தோஷங்களையெல்லாம் போக்கும். காலசர்ப்ப தோஷங்கள் அனைத்தையும் நீக்கியருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சக்தி வழிபாட்டுக்கு உரிய அற்புதமான நாள். பொதுவாகவே செவ்வாயும் வெள்ளியும் அம்பாளுக்கு உகந்த நாட்கள். இந்த நாட்களில், காலையும் மாலையும் அம்பாளுக்கு பூஜைகள் செய்வதும் மிகுந்த பலன்களைத் தரக்கூடியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39n9Tmm
via IFTTT